செவ்வாய், 8 நவம்பர், 2016

கற்பனை

ஒரு அழுகையுடன் ஒருவரின் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஒரு புத்தகத்தில் படித்தது போல, நாம் பிறந்தவுடன் இறப்பை தேடி போகிறோம் அதுதான் வாழ்க்கை. வெற்றி, தோல்வி, அழுகை, சிரிப்பு எல்லாம் ஒரு அங்கம் தான். நாம் இறப்பை தேடிய பயணம் நாம் சந்திக்கும் ஒரு ஒரு தருணங்கள் எல்லாம் ஒருவரின் வாழ்க்கை சுவாரஸ்யங்கள். பிறந்தவுடன் சுதந்திரம் பிறகு மெல்ல மெல்ல தானாக மறைந்து போகும். கண்ணீருடன் சிந்திய பிறந்தநாள் நம் நாம் பெற்றோர்களுக்கு ஒரு அழகான ஒரு கற்பனை. பிறந்தவுடன் அம்மாவின் ஒரு கற்பனை, அப்பாவிற்கு ஒரு கற்பனை, ஏன் சொந்தங்களுக்கு ஒரு கற்பனை பிறந்திருக்கும் குழந்தைக்கு வரப்போகும் வாழ்க்கையில் ஒரு  கற்பனை.இதில் எதோ ஒன்று தான் வெற்றி பயணத்தில் செல்லும், முடித்த அளவு அந்த குழந்தையின் கற்பனை இறந்து போகும். நாம் முதல் இறப்பை தேடிய பயணத்தின் வெற்றி. நம் முதல் வெற்றியும் கூட இதுதான். முதலில் தவள்வது, பிறகு நடப்பது, ஓடுவது என்று வாழ்க்கை விறு விருவென ஓடுகிறது. படிக்கும் போது ஏன் என்று கேள்வி நம்மை மிகவும் கவர்ந்த வார்த்தை. ஒருவனின் தேடல் கூட இதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. தேடலில் இரண்டு வகை, ஒரு வகை தேடி சாதிப்பது, இனொன்று தேடியவனிடம் இருந்து கற்றுக்கொள்வது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு நம் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் டெஸ்லா. முதல் வகை டெஸ்லா தேடி கண்டுபிடிப்பார், எடிசன் இரண்டாம் வகை. வெற்றி எடிசன் தான் ஆனால் இதில் எதை கற்று கொள்வது பெற்றோரிடம் இருந்து வருகிறது. நம் அனைவரின் வெற்றி நம் கற்பனையை அடைவது தான். அதில் முதல் வெற்றி ஒரு சிறந்த ஆசிரியர் கிடைப்பது. நீங்கள் ஜாக்கி சான் ஆவதும், ப்ரஸ் லீ ஆவதும் ஒரு ஆசிரியர் கையில். ப்ரஸ் லீ தனி திறமை , தனி சண்டை கலை, தானே கற்று கொண்டார். ஜாக்கி சான் கற்று கொண்டார் சண்டை கலை நல்ல ஆசிரியரிடம் இருந்து.

இப்படி வெற்றிகளுக்கு தேடி செல்லும் வழியில், நாம் முதலில் சாதிப்பது சாதியும், மதமும். எதோ ஒன்றிற்கு அடிமை ஆகவில்லை எனில் வாழ்க்கை சிறந்ததாக அமையாது. இது என் கருத்து. உண்மை இல்லை ஆனால் பொய்யும் இல்லை. ஒரு கிராமம் விட்டு இன்னோரு கிராமம் சென்றவுடன் கேட்கப்படும் கேள்வி நீ எந்த சாதியை சேர்ந்தவர். ஒரு நகரத்தில் இருந்து இன்னோரு நகரம் சென்றவுடன் கேட்கப்படும் கேள்வி எந்த மதம் என்று இரண்டும் சுதந்திரத்தின் முடிய கதவு. இந்த ஒன்றில் சிக்கிய பின்பு நம் வாழ்க்கை சீனா பெருணசுவர் போல நீண்டு கொண்டே போகும் அவ்வப்போது சிறு ஜன்னல்வுடன் இரு பக்கமும் சுவருடன். இதை தண்டி நம் இறப்பை தேடும் போது நாம் பார்ப்பது நண்பர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள்.  நண்பர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள் உங்கள் இலக்கை நீங்கள் அடைய. உங்கள் வாழ்க்கையின் நீண்ட பயணிகள் இவர்கள். நீங்கள் துரோகங்களை எதிர் பார்க்காமல் வாழ்ந்தால் நீங்கள் மனிதன், அதை எதிர் பார்த்து வாழ்ந்தால் நியானி. அதற்கு எடுத்துக்காட்டு சொல்லிக்கொண்டே போகலாம் பில் கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ் என்று ஒரு பெரிய வரலாறு உண்டு, இவர்கள் நல்ல துரோகிகள். ஒரு நல்ல நண்பன் ஆயிரம் புத்தகங்களுக்கு சமம் இதில் சந்தோஷம், துக்கம், கருத்துகள் பரிமாற்றம், துரோகம் எல்லாம் அடங்கும்.

உண் சுதந்திரம் வேண்டும் என்று உணர்வதுக்கு நமக்கு வருடங்கள் ஆகிறது. அதிலும் நம் முதல் சுதந்திர கண்டுபிடிப்பு ன் நண்பன் வீட்டில் அவன் எங்கு வேணா செல்லலாம் , என்ன வேணா செய்யலாம் ஆனால் என்னால் ஏதும் செய்யமுடிய வில்லை. பிறகு அது சுதந்திரம் இல்லை என்று தோன்றும். தப்பு செய்யாதே என்று கூறும் ஆசிரியர் , சாலை விதிகளை பற்றி இரண்டு நாள் வகுப்பு எடுக்கும் அவர் , ஒருநாள் கூட அதை மதித்தது இல்லை. படிக்கும் போது லஞ்சம் தப்பு அதை யாரும் கொடுக்க கூடாது என்று சொல்லும் அப்பா , ஒருநாள் போலீஸில் இரனுர் ரூபாய் லஞ்சம் கொடுத்தார். லஞ்சம் வாங்க கூடாது என்று கூறிய அரசு அதிகாரி அன்று வாங்கினார், தப்பு செய்ய கூடாது என்று இருந்த என் கற்பனை இறந்த இனொருநாள். இப்படி இன்னோரு கற்பனை இறந்த தருணம் என் நண்பன் ஒரு பெண்ணாய் தவறாக பேசி அவளை பற்றி அவதூறாக எல்லோரிடமும் சொல்லி வந்தான். இனொருநாள் இரவு ஒரு பையன் தன் தங்கையை தப்பாக பேசினான் என்று கோவப்படு அடிக்குறான். நியாயங்கள் ஆயிரம் அவர் அவருக்கு. பெண் சுதந்திரம் வேண்டும் என்று கேள்வி பட்ட கற்பனை, ஒரு பெண் எப்போது வேண்டுமானலும் அவள் பிடித்ததை செய்ய வேண்டும், அவள் முடிவை அவள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இன்னோரு பெண், ஒரு ஆண் மது அருந்திகிறான், நானும் அருந்துவேன், ஒரு ஆணின் தப்பை பெண் செய்தால் அது சுதந்திரம் என்று கூறினாள், அப்போது தேவை இல்லை இந்த சுதந்திரம் ஆணுக்கு கூட என்று தகர்த்து என் கற்பனை.

இப்படி அடுக்கிக்கொண்டே சொல்லவேண்டும் கற்பனைகளை, ஆனால் எல்லாம் ஒரு நொடிக்குள் முடித்து இறந்துவிடும். நான் என் வீட்டிற்க்கு பயணம் செய்து கொண்டு இருந்தேன். அன்று சற்றும் அதிர்ச்சியாக ஆம்புலன்ஸ் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தது. எல்லாருக்கும் புரிந்தது எதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது என்று. பேருந்து செல்ல செல்ல கற்பனைகள் துவங்கின, ஒருவர் ஒரு பேருந்து மற்றும் லாரி மோதியது அந்த பஸ் கவுந்துவிட்டது அதனால் தான் இத்தனை ஆம்புலன்ஸ் என்று கூறினார். சற்று தூரம் சென்ற விடன் பின்னே இருந்த அம்மாக்கள் அம இந்த லாரி ஓட்டுநர்கள் இப்படி தான் வேகமாக ஓடுவார்கள். எப்போதும் மது அருந்திவிட்டு இருப்பார்கள் என்று ஒரு கற்பனை, பிறகு இனொருவர் எவன் செத்த நமக்கு என்ன அம்மா(முதலமைச்சர்) வாழ்க அம்மா இப்படி அவங்க மருத்துவமனையில் இருக்கிறது நல்லாத்தான் இப்படிலாம் நடக்குது என்று சத்தமாக கூறினார். பேருந்து மெதுவாக அந்த இடத்தை கடந்தது, ஒரு கார் மற்றும் ஒரு பைக் மோதியது, கார் தடும் மாரி கிலே இருக்கும் பள்ளம் ஒன்றில் சிறக்கிக்கொண்டது. பேருந்து சற்று வேகமாக சென்றவிடன் எல்லோரு கற்பனை இறந்தது.

கற்பனையில் உலகம் அதில் நாமும் ஒரு கற்பனை.

~மகிழ்ச்சி~
~ ஆனந்த் வீரா ~

புதன், 26 அக்டோபர், 2016

திருக்குறள்

                                                   கடவுள் வாழ்த்து

குறள் 3:


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

கலைஞர் உரை:

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

திருக்குறள்

                                                 கடவுள் வாழ்த்து 

குறள் 2: 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

விளக்கம் 
தன்னைவிட அறிவில் மூத்த ஒருவரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் பயன் இல்லை  .

சனி, 22 அக்டோபர், 2016

திருக்குறள்

                                              திருக்குறள்

இயற்றியவர் : திருவள்ளுவர்.

திருக்குறள்  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன

குறள் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.

விளக்கம்

எழுத்துக்களின் தொடக்கம் என்பது அகரத்தில் இருந்து தொடங்குகிறது என்பதை போல நாம் வாழும் இந்த உலகிற்கும் நிச்சயம் ஒரு தொடக்கம் அல்லது தொடங்கி வைத்தரகள் (உருவாக்கியவர்கள் )இருக்கவேண்டும் அது எந்த சக்தியாகவும் இருக்கலாம் அதனை கடவுள் என்றாலும் சரியே இல்லை ஒரு இயற்கையின் சக்தி என்றாலும் சரியே. அந்த சக்தியை தான் ஆதிபவன் என்கேறோம்.

திங்கள், 3 அக்டோபர், 2016

என்றும் அன்புடன்


 ​
தூய மண் வாசனையை உணர்த்துகின்ற காற்றில் தன் பெயரை அவைகளே அழைக்கும் பிரம்மையோடு நடந்து செல்லும் இவன், செழியன்.   தன்னை வரவேற்கும் தோற்றத்தில் பிரம்மாண்டமாய் நிற்கும் தென்னை மரங்களும், தாரில்லாத செம்மண் சாலையும், சற்றே கடந்ததும் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தியும், குளத்தில் துணி துவைக்க வரும் பெண்களும், மீன் பிடித்து விளையாடும் சிறுவர்களும் அவன் மனதில் ஒரு புதுவிதமான மகிழ்ச்சியையும், கடந்தகால நினைவுகளையும் ஏற்படுத்துவதை உணர்ந்தான்.  எத்தனை கோடி இதற்கு இணையாக முடியும் என்று எண்ணிய அவன் மனதுடன் சேர்ந்து, கண்களும் கலங்கின.  கணநேரத்தில் சற்று தூரத்திலிருந்து ஒரு குரல். பெரியவர் ஒருவர் அருகில் வந்து,

'என்ன காள ரெம்ப நேரமா எதியோ தொலச்சமாரி, தொலவிக்கிட்டே இருக்கீங்களே.  எதாச்சும் காணமா சாமி'

'ஆமாங்கய்யா. மண்ணையும்,
​​
மனுச மக்களையும் தொலைச்சிட்டேன்'
என்று மனதில் கூறிக் கொண்டவனாய், 

​​
'செண்பகம் பாட்டி வீடு எங்க இருக்குங்கய்யா?' என்ற கேள்வியையே பதிலாய் வைத்தான்.

      ​
ஆம், செழியனின் பாட்டி செண்பகம், தாத்தா செல்லப்பன்.  அவனுடைய அம்மா, அப்பா இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் வந்த வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.  அப்போது செழியன் 10 வயதைக் கடந்திருக்கக் கூடும்.  வயல்கள், ஆடு, மாடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி அழிந்தன.  பசி, பட்டினியால் அவதிப்பட்ட காலமது.  பசியின் வேகம் ஈட்டியை விட ஆழமாகவே மனதில் பல எண்ணங்களை பாய்ச்சியிருந்தது.  நெல் விளையவில்லை, பழங்கள் இல்லை என்ற வெறுப்பு பசியின் உச்சத்திலிருந்த அவனுடை
​​
ய கோபமே, அந்த மண்ணைவிட்டு இவ்வளவு காலம் பிரித்து வைத்திருந்தது போலும்.  பாவம், பிஞ்சுக் குழந்தைக்கு அப்போது தெரியவில்லை மண்ணின் அருமை. 

12 முடிந்தது.  மேலே படிப்பதற்கு வெளியூர் செல்ல அடம் பிடித்து,

'பாட்டி நான் இங்க இனி இருக்கமாட்டே.  வேற எங்கயாச்சு போயி படிச்சுக்கிறே.  என்ன வேற ஊர்ல படிக்க வையி'

'என்ன ராசா ஒனக்கு இல்லாமயா?', 

என்று பாட்டி எல்லாவற்றையும் விற்று, அனுப்பி வைத்தாள் பாட்டி.

      ​
சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்ற பெருமிதமான சந்தோசத்துடன் பட்டினம் சென்றான்.  படித்தான்.  வீட்டின் சிறு நினைவுகள் கூட வந்து போகவில்லை என்றே சொல்லலாம்.  மனதில் பட்ட பல ஆசைகளும் நிறைவேறவே இந்த சுதந்திரக் காற்றே வாழ்நாள் முழுதும் வேண்டும் என்றெண்ணிய அவன், அந்த காற்றின் தூய்மையை அறிய முற்படாதவனாய் வாழ்வின் அடுத்த படியினை ஏற தயாரானான்.

​      ​
புதிய இடம், முதல் வேலை, மனதில் படபடப்பு, பார்க்கும் இடமெங்கும் பரபரப்புடன் வேலை பார்கும் கணிணிகள், யாரையும் பொருட்படுத்தாமல் அங்குமிங்கும் ஊர்ந்து கொண்டிருக்கும் இருபாலர்களின்  புதிய பார்வை.  இவை அனைத்தும் கொடுத்த அச்சத்தை மட்டுமே வாங்கிக் கொண்டவனாய் திகைத்து நின்றான்.

​      ​
நாட்கள் பலவும் இப்படியும் அப்படியுமாய் ஓட, தன் திறமைக்குரிய இடத்தையும் அடைந்த கர்வத்தோடும் வாழ்க்கையை கடந்து கொண்டிருந்தான்.  இல்லை என்ற சொல்லை மறந்தவனாய், தனிமையே இனிமை என்றவனாய், சூரியனும் என் கையில் என்றவனாய் திரிந்தான்.

வருடங்கள் பல 
கழிந்தன.  

​      ​
திடீர் திருப்பமாய், செழியனின் பொருள் செழிப்பு குறையவில்லை என்றாலும், அவன் உடல் அதற்கு நிகராய் இல்லை.  நாட்கள் கடக்கவே அன்பின் அருமையும், மண்ணின் செழுமையும் ஒருவாறாக மனதினைத் தொட்டுவிட்டே போனது.  உச்சந்தலை முதல் பாதம் முடிய தாய் கிராமத்தை நோக்கியே இழுத்துக் கொண்டிருந்தன.

'சார், சார் கீழே பாத்துப் போங்க', 

ஓர்
 அழகிய மெல்லிய குரல். 

​      ​
அப்போது தன் நினைவலைகளை விட்டு வெளியே வந்தவனாய், சற்றே திரும்பிப் பார்க்க, அத்தனை அழகையும் தனக்குள்ளே புதைத்தாற் போல, சிறிது வெட்கத்தோடு ஓடி மறைந்தாள் அந்தப் பெண்.  பின் பெரியவர் சொன்ன திசை நோக்கிச் சென்று வீட்டை அடைந்தான்.

'பாட்டி... பாட்டி....'

செண்பகம் பாட்டி வெளியே வந்து, தன் தளர்ந்த குரலில்,

 'தம்பி... யாரப்பா?'

'பாட்டி, நா... நான் தான் பாட்டி...', என்ற கணம், செண்பகம் பாட்டி கண்களில் மடை திறந்தாற் போல்,

'ஏய்யா?  என்னய்யா?  இவ்ளோ காலம்?'என்று கட்டித் தழுவிக் கொண்டாள்.

​ ​
​      
ஒவ்வொரு நாளையும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருந்த 
செழியன்
​,​

'தேன்மொழி, கொஞ்சோ த
​​
ண்ணி புள்ள
என்ற கிராமத்து மணம் உடல் எங்கும் வீசுபவனாய், வயலில் உழுது கொண்டிருந்தான்
​​
.  

'வந்துட்டேன் மாமா'என்ற
​​
குரல், வெட்கத்தோடு அன்று ஓடிய அதே பெண்ணின் குரல்.

​      
அன்று
​​
தான்
​, 
தான்
​ ​
அருந்திய நீரில், தன் பெயருக்குரிய செழிப்பையும் அடைந்தவனாய், தன் கண் துடைத்து வேலையைத் தொடர்ந்தான்
​​
செழியன்.
 
________________________________________________________________________________
 
- ராதா

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

சிறுகதைப் போட்டி தொடர்பான இறுதி அறிவிப்பு

'பயிற்சிக்கான முயற்சியில்' இரண்டு கதைகள் கதைகள் மட்டுமே வந்துள்ளன.  எனவே, இதை ஒரு போட்டியாகக் கொள்ள முடியவில்லை.
ஆனால் அந்தக் கதைகள் ஆசிரியரின் அனுமதி பெற்று, தளத்தில் வெளியிடப்படும்.  இதன்மூலம் போட்டிக்கான காலம் முடிவுற்றது என்பது தெரிவிக்கப்படுகிறது, முதல் முயற்சி பெரும்பாலும் சொதப்பும் என்ற புரிதலுடன்.

மற்றபடி, தங்களது படைப்புகளை எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம்.

எதி்ர்பார்ப்புடன்,
உதிர்ப்போம் குழு

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்

காதி கட்டிய கிழவன்
இந்த
பெருங்கிழவன்!
இவன்
மோதி முட்டப் பணிந்தான்
பரந்து கிடந்த பரங்கியன்!.

மூத்திரை சகதியில் இருந்த
இந்த மூத்த இனத்தை
சூத்திரம் செய்து
பத்திரம் செய்தவன்!

இந்த
ஊருக்கு உழைத்தவனை
உலகுக்குச் சேர்த்தது
அவனது உண்மை!

அகிம்சை என்பதே
அவனின் எண்ணம்
அதை போதித்தான்
உலகம் புரியும் வண்ணம்!

உடைந்து கிடந்த இந்தியா
இடிந்து போன இந்தியர்
இகழ்ந்து பார்த்த உலகம்
இவனால்
திரும்பிப் பார்த்த அதிசயம்!

தடி ஊன்றிய தாத்தா
எங்களின் தேசப்பிதா...
நீ ஜனனம் கண்ட இந்நாளில்
உன் மந்திரம் ஜபித்து மகிழ்கிறோம்
வாழ்க பாரதம்!
வளர்க பாரதம்!

- அருண்குமார்